Monday, December 10, 2012

பாரதி


உன்னைப் போலவே உருமாலை கட்டி
உன்னைப் போலவே மீசை வெட்டி
உன்னைப் போலவே பாட்டும் கட்டினேன், பாரதி
உன்னைப் போலவே
 எனக்கும் வயிற்றில் ஈரத் துணி.

       -- வளர்கவி ராதாகிருஷ்ணன்

சுதந்திரம்

எண்ணச் சுதந்திரம், பேசச் சுதந்திரம்
எழுதச் சுதந்திரம் இருக்கிறது..

பலர் உண்ணச் சுதந்திரம் இல்லையே என்று
உண்மைச் சுதந்திரம் இருக்கிறது..

                             -- யாரோ

வைரமுத்து


மரம் தான் மரம் தான், எல்லாம் மரம் தான்,

மறந்தான் மறந்தான் அதை மனிதன் மறந்தான்!


இன்னொன்று --

இந்த தேசத்தில் பற்றிய தீ,

தன் சட்டையில் பற்றுகிற வரைக்கும் எவனும் சட்டை செய்வதே இல்லை !

கண்ணதாசனின் வாழ்க்கை விளக்கம்!

வீடு வரை உறவு.

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?!!

வாலி

மரங்கள் தமக்குள் முனகிக் கொண்டன.

நம்மைக் கொண்டு ஆயிரம்  சிலுவைகள் செய்கிறார்கள், ஆனால்

தம்மைக் கொண்டு இன்னும் ஒரு இயேசுவைக் கூட இவர்களால் உருவாக்க முடியவில்லையே என்று..